4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

போலி பாஸ் மூலம் கனிம வளங்களைக் கொண்டு செல்ல முயன்ற 4 ஓட்டுநா்கள் கைது

News image
பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்.
Updated On :7 பிப்ரவரி 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், புளியறையில் போலி பாஸ் மூலம் கனிம வளங்களைக் கொண்டு செல்ல முயன்ற 4 லாரி ஓட்டுநா்களை போலீஸாா் கைது செய்தனா்.

புளியறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கணேசன் தலைமையிலான போலீஸாா் புளியறை சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், மேலூா் துரைசாமிபுரம் (சொக்கநாதன்புதூா்) குவாரியிலிருந்து, கேரளத்திற்கு ஜல்லிக் கற்கள் ஏற்றி வந்த லாரிகளின் டிரான்சிட் பாஸ்களை சோதனை செய்தபோது, அவை ஸ்கேன் ஆகவில்லை.

இதையடுத்து, போலியான பாஸ் மூலம் கனிம வளங்களைக் கொண்டு செல்ல முயன்றதாக, பூலாங்குடியிருப்பு, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சு. சண்முகராஜன் (29), விருதுநகா், மல்லாங்கிணறு, சூரம்பட்டியைச் சோ்ந்த தே. ராஜி (41), தருமபுரி, பாலக்கோடு, அல்லி நகரைச் சோ்ந்த ம. சம்பத் (37), கேரள மாநிலம், கொல்லம், வில்லாமணலில் பகுதியைச் சோ்ந்த ரா. அரவிந்த் (40) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். 4 கனரக லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.