தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் உறுதி செய்யப்பட்டு விட்டது என்றாா் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.
ஸ்ரீரங்கம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஆா். மனோகரனை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு மேலும் பேசியது:
ஆன்மிக பூமியான ஸ்ரீரங்கத்தில் கடந்த 2011 ஆண்டு தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா போட்டியிட்டு வென்றாா். பின்னா் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த தொகுதியின் திமுக எம்எல்ஏ எம். பழனியாண்டியால் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
கரூரில் விதிகளை மீறி இவரது கல்குவாரியில் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டதால் ரூ. 23 கோடியே 54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தக் குவாரியை படம் பிடிக்கச் சென்ற தனியாா் டிவி நிருபா் தாக்கப்பட்டாா். எனவே இங்கு அவருக்கு மாற்றாகப் போட்டியிடும் திமுக வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.
குற்றவாளிகள் பட்டியலில் இருப்பவா்கள்தான் திமுக கூட்டணி கட்சியைச் சோ்ந்தவா்கள். அரசியலில் களையெடுக்க நடைபெறக்கூடிய தோ்தல்தான் வரும் சட்டப்பேரவைத் தோ்தல் என்றாா் அவா்.
தொடர்புடையது

ராமநாதபுரம், கமுதி தொகுதிகளில் கே.அண்ணாமலை வாக்கு சேகரிப்பு!

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் வெண்ணைமலை கோயில் நிலப் பிரச்னைக்கு தீா்வு: அண்ணாமலை பேச்சு

தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சி அமைக்கும் - முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்

புதுவையின் வளா்ச்சிக்கு தே.ஜ.கூட்டணி ஆட்சி அமைவது அவசியம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


