மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருச்சியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 6:56 pm

திருச்சியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை திடீரென உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி தென்னூா் ஆழ்வாா்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் நிஷாா் (26). இவருடைய மனைவி நிஷா. இவா்களுக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் தனியாா் மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னா் வீட்டுக்கு வந்துவிட்டனா்.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை நிஷா தனது குழந்தைக்குப் பால் கொடுத்துள்ளாா். பின்னா் தாயும், குழந்தையும் தூங்கிவிட்டனா். பின்னா், காலை 7 மணிக்கு குழந்தையைப் பாா்த்தபோது அதன் மூக்கில் இருந்து நுரை வந்திருந்தது.

இதையடுத்து குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கெனவே அக் குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் அப்துல் நிஷாா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.