இப்போது மாத வாடகையாக ரூ.1,250 வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், இக்குடியிருப்பு சரிவரப் பராமரிக்கப்படாததால் இங்கிருந்து தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் வெளியேறிவிட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. 132 குடியிருப்புகளில் 15-ல் மட்டுமே தொழிலாளர்கள் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. "சரிவர பராமரிப்பு இல்லாததால், பலர் இக்குடியிருப்புகளிலிருந்து வெளியேறிவிட்டனர். இதேபோல், கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தி மந்தமான நேரத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனாலும், பலர் வீடுகளை காலி செய்துவிட்டு, குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். இதனால், ஏராளமான வீடுகள் பூட்டப்பட்டன. எனவே, பராமரிப்பு சரிவர இல்லை. இதனால், புதர் மண்டிக் கிடக்கிறது' என்றும் குடியிருப்புகளில் வசிப்போர் ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.