இந்த நிலையில், ஒவ்வொரு முறையும் ஊதிய உயர்வுக்கான அரசாணை வெளியிடப்படும்போதும், அவை அப்படியே "கணக்கில் வைத்துக்கொள்' என்பதைப் போல நிலுவையில் வைக்கப்பட்டுவிடுகிறது. திருச்சி மாவட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட அந்தநல்லூர் ஒன்றியத்தைப் பொருத்தவரை, பேட்டைவாய்த்தலை ஊராட்சியில் 8 தொழிலாளர்கள், குழுமணி ஊராட்சியில் 3 தொழிலாளர்கள், அந்தநல்லூர் ஊராட்சியில் 2 தொழிலாளர்கள் மற்றும் எட்டரை, கோப்பு, திருச்செந்துரை ஆகிய ஊராட்சிகளில் தலா ஒரு தொழிலாளியும் பணிபுரிந்து வருகின்றனர்.