கிணறுகளின் அகலத்தை ஒழுங்குபடுத்தி அதைச் சுற்றி குறைந்தபட்சம் 5 அடிக்காவது பாதுகாப்புச் சுவர் அமைக்கலாம் என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. பல கிணறுகளைச் சுற்றி மரங்கள் அடர்ந்து வளர்ந்து, கிணறு இருப்பதே தெரியாத நிலையும் இருக்கிறது. முதல் கட்டமாக இந்த நிலையாவது மாற்றப்பட வேண்டும். குறிப்பாக, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் நொச்சியத்திலிருந்து ஓமாந்தூர் செல்லும் சாலையில் இதுபோன்ற திறந்த நிலைக் கிணறுகளை ஏராளம் பார்க்க முடியும். அதிலும், குறிப்பாக சாலையோரத்திலேயே இந்தக் கிணறுகள் இருக்கின்றன.