ஆனால், அறுவடை செய்த நெல்லை அரசு நிறுவனங்கள் சார்பில் கொள்முதல் செய்ய எந்த ஏற்பாட்டையும் புதுச்சேரி அரசு செய்யாததால், விவசாயிகள் தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இப் பகுதியில் கடும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும், வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்க அறுவடை இயந்திரங்கள் இல்லை என்பன உள்ளிட்ட காரணங்களால், அறுவடைப் பணியை செய்யாமல் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். சில விவசாயிகள் அறுவடையின் அவசரம் கருதி, தமிழகப் பகுதிகளுக்குச் சென்று இயந்திரம் வாங்கவும், தொழிலாளர்களை அழைத்து வர முயற்சித்தும் பயனில்லை எனத் தெரிவிக்கின்றனர்.