காரைக்காலில் குடியேற்றப் பிரிவு அலுவலகம் இல்லாமலேயே கப்பல் துறைமுகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற பல்வேறு குளறுபடிகள் மாவட்டத்தில் நிலவி வரும் நிலையில், காரைக்கால் பகுதியில் கண்காணிப்புப் பணியை வலுப்படுத்தும் விதமாகவே, கடலோரக் காவல் நிலையத்துக்கு கூடுதல் ரோந்துப் படகுகள் அளிக்கப்படுவதாக கூறும் சமூக ஆர்வலர்கள், போதிய காவலர்களையும், தொழில் நுட்ப நிபுணர்களையும் அங்கு நியமித்து, கடலோரக் காவல் நிலையத்தை வலுப்படுத்தி, உள்நாட்டுப் பாதுகாப்பு, கண்காணிப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.