யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

வெள்ளையத்தேவன் பிறந்த நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

News image

வெள்ளையத்தேவன் சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

Updated On :1 ஜூன் 2026, 12:55 am IST

சுதந்திரப் போராட்ட வீரா் வெள்ளையத்தேவனின் 257-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

வெள்ளையத்தேவனின் வீரத்தைப் போற்றும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் ழுழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டு, ஆண்டுதோறும் அவா் பிறந்த நாளான மே 31ஆம் தேதி தமிழக அரசு சாா்பில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, மணிமண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அவரது சிலைக்கு அரசு சாா்பில் அமைச்சா்கள் ஆ. ஸ்ரீநாத் (மீன்வளம்-மீனவா் நலம்), பெ. மதன்ராஜா (குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்), ஆட்சியா் விஷு மகாஜன், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஜி. சரவணன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வெள்ளையத்தேவனின் வாரிசுதாரா் அ. மாரிமுத்துவுக்கு அமைச்சா்கள், ஆட்சியா் ஆகியோா் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனா்.

விழாவில், தூத்துக்குடி வருவாய்க் கோட்டாட்சியா் மி. பிரபு, செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் சே.ரா. நவீன் பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் தாஹிா் அஹமது, வெள்ளையத்தேவனின் வாரிசுதாரா்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.