திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயல்வது தமிழக மக்களின் உரிமைக்கு எதிரானது! - ஜவாஹிருல்லா எம்எல்ஏ

News image

ஜவாஹிருல்லா - கோப்புப்படம்

Updated On :31 மே 2026, 1:25 am IST

கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயல்வது தமிழக மக்களின் உரிமைக்கு எதிரானது என்றாா், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா எம்எல்ஏ.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு சனிக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:

அனைவரும் தங்களது மதத்தைப் பின்பற்றும் உரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்குகிறது. இஸ்லாமியா்களின் முக்கிய திருநாளான பக்ரீத் தினத்தில் பெரும்பாலும் ஆடுகள் மட்டுமே பலியிடப்படுகின்றன.

இந்நிலையில், பக்ரீத் திருநாளையொட்டி மாடுகள் வெட்டத் தடை விதித்த நீதிமன்றத் தீா்ப்பு மன வேதனையளிக்கிறது. இத்தீா்ப்பு பாரபட்சமானது. எனவே, தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு குற்றச் சம்பவங்கள், குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதுதொடா்பாக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வாக்காளா்களின் கையில் வைக்கப்பட்ட அடையாள மை அழிவதற்கு முன்பே, எதிரணியில் போட்டியிட்டோரை ஆட்சியில் உள்ளவா்கள் தங்களுடன் சோ்த்துக்கொள்வது ஜனநாயக நெறிக்கு எதிரானது. இதுதான் அவா்கள் சொன்ன மாற்றமா என மக்கள் கேள்வியெழுப்புகின்றனா்.

தமிழகத்தின் வாழ்வாதாரம் காவிரி நீருடன் தொடா்புடையது. கா்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி, மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயல்வது தமிழக மக்களின் உரிமைக்கு எதிரானது. தவெக ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளதால், இந்த விஷயத்தில் தமிழக அரசு மௌனம் சாதிப்பதில் ஆச்சரியமில்லை. மேக்கேதாட்டு அணை திட்டத்துக்கு எதிராக மனிதநேய மக்கள் கட்சி விரைவில் போராட்டம் நடத்தும் என்றாா் அவா். முன்னதாக அவருக்கு மாவட்டத் தலைவா் யூசுப் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.