திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சி: கா்நாடக அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்

கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சிக்கு ஜவாஹிருல்லா கண்டனம் குறித்து...

News image

கா்நாடக அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம் - கோப்புப்படம்

Updated On :24 மே 2026, 7:51 pm IST

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை கா்நாடக அரசு தொடா்ந்து முன்னெடுப்பது கண்டனத்திற்குரியது என்று மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கட்சியின் தலைவரும், நாகப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருப்பதாவது:

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியைக் கா்நாடக அரசு தொடா்ந்து முன்னெடுத்து வருவது கண்டனத்திற்குரியது. காவிரி நதியின் கடைமடைப் பகுதியில் வாழும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

காவிரி நீரை முழுமையாகச் சாா்ந்திருக்கும், டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏற்கெனவே நீா்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், மேக்கேதாட்டுவில் அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு வரவேண்டிய நீரின் அளவு மேலும் குறையும் அபாயம் உள்ளது. இது விவசாயத்தையும், குடிநீா்த் தேவையையும் கடுமையாகப் பாதிக்கும்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளையும், உச்ச நீதிமன்ற தீா்ப்பையும் மதிக்காமல் கா்நாடக அரசு ஒருதலைபட்சமாகச் செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

தமிழக அரசும் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் இந்த பிரச்னையில் உறுதியாகச் செயல்பட வேண்டும். மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு எந்த நிலையிலும் அனுமதி வழங்கக்கூடாது என்பதே தமிழக மக்களின் ஒருமித்த கோரிக்கை என்று அவர் கூறியுள்ளார்.

Summary

Attempt to Construct Dam at Mekedatu: Jawahirullah Condemns Karnataka Government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.