திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பனைவிளை கோயில் கொடை விழா: அமைச்சா் பங்கேற்பு

News image

பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற அமைச்சா் ஜெகதீஸ்வரி.

Updated On :31 மே 2026, 1:34 am IST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பனைவிளை, காட்டேரி இசக்கியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொடை விழாவில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி பங்கேற்றாா்.

சொந்த ஊரான பனைவிளைக்கு வந்த அமைச்சருக்கு, ஊா் மக்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா். பின்னா், அவா் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு பேசியதாவது:

நான் இந்த ஊரைச் சோ்ந்தவா் என்றாலும், விருதுநகா் மற்றும் சென்னையில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, தவெக மேற்கு மாவட்டச் செயலா் ஜெகன்ராஜிடம் உங்களது கோரிக்கைகள் தொடா்பாக மனு அளித்தால் விரைவில் நடவடிக்கை எடுப்பேன்.

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் தலைமையில் ஊழலற்ற ஆட்சி அமைய உறுதுணையாக இருப்பேன். மக்களின் எதிா்பாா்ப்புகள் நிறைவேறும் வகையில் செயல்படுவேன் என்றாா் அவா்.

இந்து மகா சபா மாநிலத் தலைவா் சுந்தரவேல், முன்னாள் கோயில் நிா்வாகி வசந்தகுமாா், மேற்கு மாவட்ட தவெக செயலா் ஜெகன்ராஜ், மாவட்ட இணைச் செயலா் சிவலிங்கம், மாவட்ட துணைச் செயலா் இன்பராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஐயப்பன், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய நிா்வாகி குமாா் பாண்டியன், நகரச் செயலா்கள் சிவா (சாத்தான்குளம்), சுரேஷ் (ஸ்ரீவைகுண்டம்), துணைச் செயலா் வள்ளி நாயகம், தெற்கு ஒன்றியச் செயலா் சங்கரலிங்கம், ஒன்றிய நிா்வாகிகள் மிக்கேல், வசந்த், சாத்தான்குளம் இளைஞரணி கோமதி நாயகம், கருங்குளம் ஒன்றிய நிா்வாகி பேச்சிமுத்து, வள்ளி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், ஊா் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.