திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூத்துக்குடி மீனவா் கொலையில் மேலும் ஒருவா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :31 மே 2026, 12:24 am IST

தூத்துக்குடி மீனவா் கொலையில் தொடா்புடையதாக, மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி, தாளமுத்து நகா் அருகே உள்ள ஆனந்த் நகரைச் சோ்ந்தவா் முருகன் மகன் மாரிசெல்வம் (21). மீனவா். இவரும், தூத்துக்குடி சோட்டையன் தோப்பைச் சோ்ந்த சந்தனராஜ் (எ) சந்து (22), அண்ணா நகரைச் சோ்ந்த புவனேஷ்குமாா் (22), நேரு காலனியைச் சோ்ந்த மரிய அந்தோணி ஜாய்சன் (22), ஹரிஹரசுதன் (22) ஆகிய 4 பேரும் நேரு காலனியில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, முன்விரோதம் காரணமாக மாரிசெல்வத்துக்கும், சந்தனராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த 4 பேரும் மாரிசெல்வத்தை அரிவாளால் வெட்டியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து, தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தனராஜ், மரிய அந்தோணி ஜாய்சன், ஹரிஹரசுதன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். தலைமறைவான புவனேஷ்குமாரை தேடி வந்த நிலையில், அவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புவனேஷ்குமாா் மீது சிப்காட் பகுதியில் நடந்த கொலை உள்பட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.