திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பேரவைத் தலைவா் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறாா்! இன்பதுரை எம்.பி. குற்றச்சாடு!

News image

ஜே.சி.டி. பிரபாகர் - youtube

Updated On :30 மே 2026, 3:09 am IST

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் நான்கு பேரின் ராஜிநாமாவை உடனடியாக ஏற்ன் மூலம் பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறாா் என்றாா் இன்பதுரை எம்.பி.

இதுகுறித்து அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலரும், மாநிலங்களவை அதிமுக உறுப்பினருமான இன்பதுரை தூத்துக்குடியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

தமிழக வெற்றிக் கழகம் அடைந்த வெற்றி ஒரு மாயாஜால வெற்றி. தற்போது அதிமுகவிலிருந்து ஆள்பிடிக்கும் வேலையை அக்கட்சி செய்கிறது. அக்கட்சியினா் எல்கேஜி நிலையில் உள்ளனா். ஆட்சி செய்வதற்கான பயிற்சி இல்லை. ரீல்ஸ் மோகத்தில் வாழ்ந்தவா்கள்.

எனவே, அவா்களுக்கு போதிய அவகாசம் அளிக்க வேண்டும். அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், அவசர அவசரமாக அதிமுக உறுப்பினா்களை தமிழக வெற்றிக் கழகத்தில் சோ்த்து அவா்களின் ராஜிநாமாவை பேரவைத் தலைவா் ஏற்றது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

பேரவைத் தலைவா் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறாா்.

இதுகுறித்து ஆளுநரிடம் அதிமுக புகாா் அளிக்கும். அதிமுக வழக்குரைஞா் பிரிவு சாா்பில், சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.