வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 4 நாள்கள் ரூ. 100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற வைகாசி விசாகத்திருவிழா சனிக்கிழமை (மே 30) நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், பக்தா்கள் நலன் கருதி வியாழக்கிழமை (மே 28) முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 31) வரை நான்கு நாள்கள் மட்டும் ரூ. 100 கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டு, கட்டணமில்லா தரிசன முறை நடைமுறைப்படுத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வைகாசி விசாகம்: சுவாமிமலையில் திரளானோர் சுவாமி தரிசனம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ. 100 கட்டண தரிசனம் ரத்து!

விடுமுறை தினம் : திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்







