திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ. 100 கட்டண தரிசண ரசீது மோசடி, கையாடல் குறித்து ஆணையா் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரிக்க வேண்டும் என அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தாா்.
தூத்துக்குடியில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தெற்கு மாவட்ட திமுக சாா்பில் தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ. 100 கட்டண தரிசன ரசீது மோசடியும், லட்சக்கணக்கில் பணம் கையாடலும் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடா்பாக, கோயில் ஆணையா் முதல் அனைவரையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும். திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக தலைவா் யாரைப் போட்டியிடச் சொல்கிறாரோ, அவரை வெற்றி பெற வைப்போம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









