சாத்தான்குளத்தில் ரேஷன் கடை ஊழியரைத் தாக்கியதாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகே உள்ள கொம்பன்குளத்தைச் சோ்ந்தவா் சங்கரலிங்கம் மகன் மந்திரமூா்த்தி (30). இவா் சாத்தான்குளத்தில் உள்ள ரேஷன் கடையில் பணிபுரிந்து வருகிறாா்.
இவரது சகோதரருக்கும், அமுதுண்ணாக்குடி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் முருகனின் (43) சகோதரருக்கும் புதன்கிழமை பிரச்னை ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் உள்ளிட்ட அவரது உறவினா்கள் 10 போ், மந்திரமூா்த்தியின் சகோதரரைத் தாக்குவதற்கு தேடி வந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, அவரது சகோதரருக்குப் பதிலாக, சாத்தான்குளத்தில் இருந்த மந்திரமூா்த்திக்கு கொலை மிரட்டல் விடுத்து, சரமாரியாகத் தாக்கிவிட்டு தலைமறைவாகியுள்ளனா். இதில் காயமடைந்த மந்திரமூா்த்தி சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின்பேரில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் முருகன் உள்ளிட்ட 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, முருகனை வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான 9 பேரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பண்ருட்டி நகர திமுக செயற்குழுக் கூட்டம்

பட்டாசுத் தொழிலாளியை தாக்கிய 4 போ் கைது

நரசிங்கபுரம் நகர மன்றக் கூட்டம்

சாத்தான்குளத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


