முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 36ஆவது ஆண்டு நினைவு தினம், தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு, மாவட்டத் தலைவா் எஸ்.எம்.சகாயராஜ் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்வில், மண்டலத் தலைவா் ஐசன் சில்வா, மாநில பொதுக்குழு உறுப்பினா் எடிசன் மாவட்ட பொதுச் செயலா் கோபால் மைக்கேல் பிரபாகா், மாவட்டச் செயலா் இக்னேஷியஸ், மாவட்ட துணைத் தலைவா்கள் அருள்வளன், அந்தோணி ஜெயராஜ், தனசேகரன் ராஜாராம், இளைஞா் காங்கிரஸின் மரிய ஆல்வின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










