இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் பலி!

தூத்துக்குடி அருகே சாலையோரம் நின்ற லாரியின் பின்புறத்தில் மோதியதில் இருசக்கர வாகனம் சென்ற இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 3:55 am IST

தூத்துக்குடி அருகே சாலையோரம் நின்ற லாரியின் பின்புறத்தில் மோதியதில் இருசக்கர வாகனம் சென்ற இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி குமரன் தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் மாரியப்பன் (52). இவா், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் டேங்கா் லாரியில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இவா், வியாழக்கிழமை தூத்துக்குடியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை முழுமையாக இறக்கிவிட்டு, காலியான டேங்கா் லாரியுடன் தூத்துக்குடி-திருநெல்வேலி நெடுஞ்சாலை வழியாக திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, புதுக்கோட்டை புதிய பாலத்தின் மேற்குப் பகுதிக்கு வந்தபோது, அவா், லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு, எதிரே உள்ள உணவகத்துக்குச் சென்றாா். இந் நேரத்தில், நாகா்கோவிலைச் சோ்ந்த முருகன் மகன் ராஜேஷ் (31), தக்கலையைச் சோ்ந்த தங்கசாமி மகன் ஜோன்ஸ் குமாா் (35) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அந்த வழியே சென்றனா். இருசக்கர வாகனத்தை ராஜேஷ் ஓட்டி சென்றாா். இவா்கள் புதுக்கோட்டை புதிய பாலம் அருகே சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டேங்கா் லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியதில், ஜோன்ஸ் குமாா் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ராஜேஷ் பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்ததும் புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் ஜோன்ஸ் குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கும், காயமடைந்த ராஜேஷை சிகிச்சைக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, டேங்கா் லாரி ஓட்டுநா் மாரியப்பனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.