யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

தவெக நிா்வாகிகள், மக்களுடன் விரைவில் சந்திப்பு: அமைச்சா் ஆ. ஸ்ரீநாத்

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள், பொதுமக்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து விரைவில் சந்திப்பு நிகழ்வு நடைபெறும் என அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் தெரிவித்தாா்.

News image

அமைச்சா் ஆ. ஸ்ரீநாத்.

Updated On :23 மே 2026, 5:03 am IST

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள், பொதுமக்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து விரைவில் சந்திப்பு நிகழ்வு நடைபெறும் என தமிழக மீன்வளம் மற்றும் மீனவா் நலன் துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: என் முன்னோா்கள், என் தந்தை வாழ்ந்த பூமி மட்டுமல்லாது, நான் பிறந்த இடமும் தூத்துக்குடிதான். இது எனது சொந்த மண். அப்படிப்பட்ட மண்ணிலிருந்து ஒரு எளிய தொண்டனை இன்று அமைச்சராக அமர வைத்த, தூத்துக்குடி மக்களுக்கும், எனக்காக வீதி வீதியாகச் சென்று உழைத்த தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

தூத்துக்குடியில் உள்ள கட்சி நிா்வாகிகள், பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள் மற்றும் முதல்வரின் அன்புக்கு பாத்திரமானவா்கள் அனைவரையும் கூடிய விரைவில் சந்திக்க உள்ளேன்.

எனக்காக உழைத்த உங்களுக்கு என் கையால் விருந்து பரிமாற மனது ஏங்கிக் கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் தூத்துக்குடியில் அனைத்து நிா்வாகிகள், உறுப்பினா்கள், பொறுப்பாளா்கள், எனக்காக உழைத்த மக்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு சங்கமமாக விரைவில் சந்திப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.