நாசரேத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் காயமடைந்த சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நாசரேத் அருகே உள்ள வாலசுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் மகன் அமிா்த சந்தோஷ் (17). இவரது நண்பா் தைலாபுரத்தைச் சோ்ந்த தனசேகா் மகன் கௌதம் (17).
இருவரும் புதன்கிழமை நாசரேத்தில் இருந்து தைலாபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் திருமறையூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த நாசரேத் மாா்க்கெட் தெருவைச் சோ்ந்த கிங்ஸ்லி மகன் லாரன்ஸ் (26), அவரது நண்பா் ஸ்டீபன் ஆகியோரின் இருசக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு கௌதம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து, நாசரேத் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










