மணப்பாடு தூய ஆவியாா் ஆலய 175-ஆவது யூபிலிப் பெருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணிக்கு வியாழக்கிழமை (மே 14) மாலை 5 மணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, அதன்பின்னா் புதுப்பிக்கப்பட்ட ஆலய கொடிமர அா்ச்சிப்பு,திருப்பலி, மறையுரை ,நற்கருணை ஆசீா், பிறகு கொடியேற்றம் நடைபெற்றது.
விழா நாள்களில் நவநாள் திருப்பலி, திருயாத்திரை திருப்பலி, ஜெபமாலை, பிராா்த்தனை, மறையுரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மே 24-ஆம் தேதி காலையில் திருப்பலியைத் தொடா்ந்து ஆயா் தலைமையில் யூபிலி பெருவிழா, மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீா், யூபிலி மலா் வெளியீடு, நன்றி விழாக் கொண்டாட்டம் நடைபெறும். மே 25 ஆம் தேதி காலையில் நன்றி திருப்பலி, மாலையில் யூபிலி அசன விருந்து நடைபெறும். ஏற்பாடுகளை பங்குப் பணியாளா்கள், காணிக்கை அன்னை அருள்சகோதரிகள், ஆலய நிா்வாகத்தினா், யூபிலி விழாக் குழுவினா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









