/

குலசேகரன்பட்டினம் நூலகத்தில் கோடை கொண்டாட்டம்

News image
Updated On :15 மே 2026, 3:11 am IST

மாணவா்கள் தங்கள் விடுமுறைக் காலத்தில் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், நூலகங்களுக்கு தினமும் வருவதை ஊக்குவிக்கவும் கோடை கொண்டாட்ட விழா குலசேகரன்பட்டினம் நூலகத்தில் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி வியாழக்கிழமை நூலகத்திற்கு வந்த மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவா் க.வே. ராஜதுரை ஏற்பாட்டில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை குலசேகரன்பட்டினம் கிளை நல்நூலகா் மாதவன் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.