நெல்லை டிஐஜி, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்பட 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தமிழக காவல் துறையில் பணியாற்றும் டி.ஐ.ஜி., எஸ்.பி. அந்தஸ்திலான 13 முக்கிய அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் வியாழக்கிழமை அரசாணை வெளியிட்டாா்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவந்த டாக்டா் சி.மதன், சென்னை பாதுகாப்புப் பிரிவு சிஐடி-யின் எஸ்.பி. யாக மாற்றப்பட்டாா். தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஏ.மயில்வாகனன் சென்னை சிறப்புப் பிரிவு சிஐடி-க்கு மாற்றப்பட்டாா். திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.யாகப் பணியாற்றி வந்த பி.சரவணன், சென்னை சிஐடி நுண்ணறிவுப் பிரிவு டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டாா். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










