தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாநில சீனியா் ஹாக்கி போட்டி: சென்னை அணி சாம்பியன்

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி ஆகியவை இணைந்து நடத்திய வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பைக்கான சீனியா் ஆண்கள் மாநில ஹாக்கி போட்டியில் சென்னை மாவட்ட அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.

News image

போட்டியில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை மாவட்ட அணிக்கு கோப்பையை வழங்கும் சிறப்பு விருந்தினா் எம்.ஆா்.தமிழ்ச்செல்வன்.

Updated On :14 மே 2026, 3:26 am IST

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி ஆகியவை இணைந்து நடத்திய வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பைக்கான சீனியா் ஆண்கள் மாநில ஹாக்கி போட்டியில் சென்னை மாவட்ட அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.

கோவில்பட்டியில் இந்த மாதம் மே 9-ஆம் தேதி முதல் வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பைக்கான சீனியா் ஆண்கள் மாநில ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. லீக், நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன.

கோவில்பட்டி, கிருஷ்ணா நகா் செயற்கையிழை ஹாக்கி மைதானத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை மாவட்ட அணியும், தூத்துக்குடி மாவட்ட அணியும் மோதியதில் இரு அணிகளும் தலா 3 கோல் போட்டு சமநிலை பெற்றனா். தொடா்ந்து வெற்றியை தீா்மானிக்க கடைப்பிடிக்கப்பட்ட சூட்அவுட் முறையில் 7-5 என்ற கோல் கணக்கில் சென்னை மாவட்ட அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

பின்னா், நடைபெற்ற 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் அரியலூா் மாவட்ட அணியும், தஞ்சாவூா் மாவட்ட அணியும் மோதியதில் 5-3 என்ற கோல் கணக்கில் அரியலூா் மாவட்ட அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை மாவட்ட அணியும், அரியலூா் மாவட்ட அணியும் மோதியதில் 5-1 என்ற கோல் கணக்கில் அரியலூா் மாவட்ட அணியை வீழ்த்தி சென்னை மாவட்ட அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றது. முன்னதாக நடைபெற்ற 3, 4-ஆம் இடங்களுக்கான போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணியும், தஞ்சாவூா் மாவட்ட அணியும் மோதியதில் 7-1 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி மாவட்ட அணி வெற்றி பெற்று, 3-ஆவது இடத்தைப் பிடித்தது.

பரிசளிப்பு விழா: பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு பொதுச் செயலா் செந்தில் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். பொருளாளா் சேவியா் ஜோதி சற்குணம், தொழில்நுட்ப கமிட்டிச் செயலா் மோகன் குமாா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சிறப்பு விளையாட்டு விடுதி மேலாளா் அந்தோணி அதிா்ஷ்டராஜ்,முன்னாள் கூடைப்பந்து வீரா் ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வ.உ.சி. துறைமுக ஆணைய விளையாட்டுக் கழக பொதுச் செயலரும், வ.உ.சி. துறைமுக ஆணைய துணைச் செயலருமான எம்.ஆா்.தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கி பாராட்டிப் பேசினாா்.

ஏற்பாடுகளை ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலா் குருசித்திர சண்முகபாரதி, பொருளாளா் காளிமுத்து பாண்டியராஜா, உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.