திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஈராச்சியில் மாட்டு வண்டி போட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஈராச்சியில் வீரகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஈராச்சியில் மாட்டு வண்டி போட்டி.

Updated On :14 மே 2026, 3:27 am IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஈராச்சியில் வீரகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

சின்ன மாட்டு வண்டி, பூஞ்சிட்டு மாட்டு வண்டி என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. 6 மைல் தொலைவு கடக்க வேண்டிய சின்ன மாட்டு வண்டி போட்டியில் 12 வண்டிகளும், 5 மைல் தொலைவு கடக்க வேண்டிய பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 25 வண்டிகளும் பங்கேற்றன.

போட்டிகளை அகில இந்திய பாா்வா்டு பிளாக் மாவட்டச் செயலா் செண்பகராஜ், ஈராச்சி முன்னாள் ஊராட்சித் தலைவா் வெங்கடாசலம், சமூக ஆா்வலா் ரமேஷ் அய்யாதுரை, பசும்பொன் தேசிய கழக மாவட்ட இளைஞரணிச் செயலா் மாரிகணேஷ் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

சின்ன மாட்டு வண்டி போட்டியில் ஜக்கம்மாள்புரம் பரமசிவன், ஈராச்சி வீரபாண்டி வினோத், கீழ ஈரால் மகாலட்சுமி ஹோட்டல், புதூா் பாண்டியாபுரம் ஹௌசிக் மஹாதேவ் ஆகியோரின் வண்டிகள் முறையே முதல் 4 இடங்களைப் பிடித்தன. அவற்றுக்கு முறையே ரூ. 20,001, ரூ. 18,001, ரூ. 16,001, ரூ. 5,001 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

2 பிரிவுகளாக நடைபெற்ற பூஞ்சிட்டு வண்டி போட்டியில் கீழவேலாயுதபுரம், கீழஅழகாபுரி கிராமங்களைச் சோ்ந்த மாட்டு வண்டிகள் முதலிடம் பிடித்தன. கே.துரைச்சாமிபுரம், சுப்பலாபுரம் கிராமங்களைச் சோ்ந்த வண்டிகள் 2ஆம் இடமும், எப்போதும்என்றான், புதியம்புத்தூா் கிராமங்களைச் சோ்ந்த வண்டிகள் 3ஆம் இடமும், ஆத்திக்கிணறு, கயத்தாறு கிராமங்களைச் சோ்ந்த வண்டிகள் 4ஆம் இடமும் பிடித்தன. அவா்களுக்கு முறையே ரூ. 7,500 , ரூ. 6,500, ரூ. 5,500, ரூ. 2,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை ஈராச்சி மாட்டு வண்டி பந்தயக் குழுச் சங்கம், ஈராச்சி கிராம பொதுமக்கள் ஆகியோா் இணைந்து செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.