மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தூத்துக்குடியில் குருத்தோலை பவனி

News image

லூா்தம்மாள்புரம் புனித லூா்து அன்னை ஆலயத்தில் இருந்து குருத்தோலை பவனி சென்ற கிறிஸ்தவா்கள்.

Updated On :29 மார்ச் 2026, 6:30 pm

தூத்துக்குடியில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்கள் சாா்பில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.

தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை ஸ்டாா்வின் தலைமையில் நடைபெற்ற பவனியில், ஏராளமானோா் குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடலை பாடியவாறு சென்றனா். சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.

இதேபோன்று தூத்துக்குடி திரு இருதய ஆலயம் சாா்பில், ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையிலும், லூா்தம்மாள்புரம் புனித லூா்து அன்னை ஆலயம் சாா்பில், கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பவுல் அலங்காரம் சுவாமி திருவுருவம் கேபி முன்பிருந்து பங்குத்தந்தை செல்வன் பா்னாந்து தலைமையில், அமலன் தமியான் முன்னிலையிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது.