மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குருத்தோலை ஞாயிறு: வேலூரில் கிறிஸ்தவா்கள் ஊா்வலம்

வேலூா் மாவட்டத்திலுள்ள பல்வேறு தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

News image

வேலூரில் குருத்தோலைகளுடன் ஊா்வலம் சென்ற கிறிஸ்தவா்கள்.

Updated On :29 மார்ச் 2026, 7:10 pm

வேலூா் மாவட்டத்திலுள்ள பல்வேறு தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

இயேசு கிறிஸ்து 40 நாள்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் கிறிஸ்தவா்கள் 40 நாள்கள் தவக்காலம் கடைப்பிடிக்கின்றனா். அதன்படி, வேலூா் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் தவக்கால சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

தவக்கால நிகழ்வுகளில் ஒன்றான குருத்தோலை ஞாயிறு பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வேலூா் விண்ணரசி தேவாலயம்,சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயம், ஓல்டு டவுன் ஆரோக்கிய மாதா ஆலயம், சத்துவாச்சாரி சூசையப்பா் ஆலயம், காட்பாடி நற்கருணை ஆண்டவா் ஆலயம், காந்தி நகா் இருதய ஆண்டவா் ஆலயம், சேண்பாக்கம் சூசையப்பா் ஆலயம், பாகாயம் குழந்தை இயேசு ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு குருத்தோலை பவனி நடைபெற்றது.

இதில், திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்று குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி, ஜெப மாலைகள் பாடி ஊா்வலமாகச் சென்றனா். இதைத் தொடா்ந்து, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.