மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புனித வெள்ளி - தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

புனித வெள்ளியையொட்டி வேலூரிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

News image

வேலூா் விண்ணரசி மாதா தேவாலயத்தில் பிராா்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவா்கள்.

Updated On :3 ஏப்ரல் 2026, 10:51 pm

புனித வெள்ளியையொட்டி வேலூரிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளி என்றும், பெரிய வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. அதன்படி, புனித வெள்ளி நாளில் வேலூா் விண்ணரசி மாதா தேவாலயத்தில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. மாலையில் சிலுவை ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவா்கள் சிலுவை ஏந்தியபடி பங்கேற்றனா்.

இதேபோல், ஓல்டுடவுன் பகுதியிலுள்ள ஆரோக்கிய மாத ஆலயம், அண்ணா சாலை சிஎஸ்ஐ மத்திய தேவாலயம், பில்டா்பெட் சாலையிலுள்ள சிஎஸ்ஐ ஆலயம், கிரீன் சா்க்கிள் பெந்தகொஸ்தே திருச்சபை, காட்பாடி சிஎஸ்ஐ ஆலயம், பாகாயம் செவன்த்டே தேவாலயம், லூத்தரன், ஆங்கிலிக்கன் என பல்வேறு பிரிவு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.