கோவில்பட்டி பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறும் பள்ளியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
கோவில்பட்டி தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தனி அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
கோவில்பட்டி தொகுதி வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு நாடாா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (மாா்ச் 28) நடைபெற உள்ளது. இதையடுத்து, அப்பள்ளியை ஆட்சியா் பாா்வையிட்டு, அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
முன்னதாக, வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் எவ்வாறு பயிற்சியளிக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி வழங்கும் அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
ஆய்வின்போது, கோவில்பட்டி தொகுதி தோ்தல் அலுவலரும் சாா் ஆட்சியருமான ஹிமான்ஷு மங்கள், உதவி தோ்தல் அதிகாரியும், கோவில்பட்டி வட்டாட்சியருமான அப்பணராஜ், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்டீபன் ரத்தினகுமாா், துணை வட்டாட்சியா் பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பல்லடம் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியா் ஆய்வு

வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களுக்கு பயிற்சி

கூடலூா் சட்டப்பேரவைத் தொகுதி மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


