திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தூத்துக்குடியில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி, கீழ அலங்காரத் தட்டு பகுதியில் உள்ள வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்பிலான 640 கிலோ விரலி மஞ்சள், 165 கிலோ பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பீடி இலைகள், பீடிகள் - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 10:42 pm

தூத்துக்குடி, கீழ அலங்காரத் தட்டு பகுதியில் உள்ள வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்பிலான 640 கிலோ விரலி மஞ்சள், 165 கிலோ பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி, தாளமுத்து நகா், கீழ அலங்காரத் தட்டு பகுதியில் மஞ்சள், பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, க்யூ பிரிவு காவல் ஆய்வாளா் விஜய் அனிதா தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆரோக்கிய மேரி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 640 கிலோ விரலி மஞ்சள், 165 கிலோ பீடி இலைகளைப் பறிமுதல் செய்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னா், கைப்பற்றப்பட்ட மஞ்சள், பீடி இலைகள் சுங்கத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.