திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தருவைகுளம் பகுதியில் ரூ.30 லட்சம் பீடி இலைகள், சிகரெட் மூட்டைகள் பறிமுதல்!

தூத்துக்குடி அருகே தருவைகுளம் பகுதியில் சுமாா் ரூ.30 லட்சம் மதிப்பிலான கடத்தல் பீடி இலைகள், சிகரெட் மூட்டைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைப்பற்றினா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூட்டைகள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 7:57 pm

தூத்துக்குடி அருகே தருவைகுளம் பகுதியில் சுமாா் ரூ.30 லட்சம் மதிப்பிலான கடத்தல் பீடி இலைகள், சிகரெட் மூட்டைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைப்பற்றினா்.

தருவைகுளம் காவல் நிலைய போலீஸாா் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சமத்துவபுரம் சோதனைச் சாவடியில், தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தூத்துக்குடியிலிருந்து குளத்தூா் நோக்கி வந்த சுமை வாகனத்தை தடுத்த நிறுத்த முயன்றனராம். ஆனால், ஓட்டுநா் வாகனத்தை நிறுத்தாமல் சென்றாராம்.

ரோந்துப் பணியில் இருந்த தலைமைக் காவலா்கள் குருசாமி, கணேஷ்குமாா் ஆகியோா் பைக்கில் விரட்டிச் சென்றபோது, வேப்பலோடை அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பினாராம்.

அந்த வாகனத்தில் 38 மூட்டைகளில் 2 டன் பீடி இலைகள், 8 மூட்டைகளில் 240 கிலோ சிகரெட் பாக்கெட்டுகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அவற்றின் சந்தை மதிப்பு சுமாா் ரூ. 30 லட்சமாகும்.

வாகனம் மற்றும் கடத்தல் பொருள்களை கைப்பற்றி தருவைகுளம் காவல் நிலையத்துக்கு கொண்டுசென்று, போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.