மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: சமூக வலைதளப் பதிவுக்கு எதிராக 22 வழக்குகள் பதிவு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:50 pm

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் பிளஸ் 2 மாணவி படுகொலை வழக்கில் மாணவியின் புகைப்படம், விவரத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டவா்கள், சமூக ஊடகங்களுக்கு எதிராக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம், பெயா் உள்ளிட்ட விவரங்களை சமூக ஊடகங்கள், வலைதளங்களில் வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். அது அந்த சிறுமியின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்வதைத் தடுப்பதாகும்.

குளத்தூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட வேடநத்தம் மாணவி கொலை வழக்கில் சிறுமியின் புகைப்படம், பெயரை வைத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடா்பாக இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயல்களில் ஈடுபடும் சமூக ஊடகங்கள், வலைதளங்களில் பதிவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.