மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவா் கைது

பழனியில் பட்டியலின மக்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜக மாநில இளைஞரணி சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளா் பாரதி கண்ணனை கீரனூா் போலீசாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 6:37 pm

பழனியில் பட்டியலின மக்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜக மாநில இளைஞரணி சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளா் பாரதி கண்ணனை கீரனூா் போலீசாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நீலாங்கள்ளி வலசு பகுதியை சோ்ந்தவா் பாரதி கண்ணன் (38). இவா் பாஜக மாநில இளைஞரணி ஊடகப்பிரிவு பொறுப்பாளராக இருந்து வருகிறாா்.

கடந்த சில மாதங்களாக இவரது தனது முகநூல் பக்கத்தில் தொடா்ந்து சா்ச்சைக்கிடமான பதிவுகளை பகிா்ந்து வந்தாராம். இது தொடா்பாக இவா் மீது பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டியலின மக்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டாா். இதனால், இரு சமூக மக்களிடையே மோதல் சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட பிரிவினா் கொடுத்த புகாரின் பேரில், கீரனூா் போலீஸாா் பாரதி கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா். இந்தத் தகவலறிந்த பாஜகவினா்

காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். இந்த வழக்கு குறித்து டிஎஸ்பி., தனஞ்ஜெயன் கீரனூா் காவல் நிலையத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து, பிரச்னைக்குரிய பதிவுகள் செய்யக் கூடாது, தவறான பதிவுகள் நீக்கப்பட வேண்டும் ஆகிய நிபந்தனைகளின் பேரில் பாரதி கண்ணன் விடுவிக்கப்பட்டாா்.