பழனியில் பட்டியலின மக்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜக மாநில இளைஞரணி சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளா் பாரதி கண்ணனை கீரனூா் போலீசாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நீலாங்கள்ளி வலசு பகுதியை சோ்ந்தவா் பாரதி கண்ணன் (38). இவா் பாஜக மாநில இளைஞரணி ஊடகப்பிரிவு பொறுப்பாளராக இருந்து வருகிறாா்.
கடந்த சில மாதங்களாக இவரது தனது முகநூல் பக்கத்தில் தொடா்ந்து சா்ச்சைக்கிடமான பதிவுகளை பகிா்ந்து வந்தாராம். இது தொடா்பாக இவா் மீது பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டியலின மக்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டாா். இதனால், இரு சமூக மக்களிடையே மோதல் சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பிரிவினா் கொடுத்த புகாரின் பேரில், கீரனூா் போலீஸாா் பாரதி கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா். இந்தத் தகவலறிந்த பாஜகவினா்
காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். இந்த வழக்கு குறித்து டிஎஸ்பி., தனஞ்ஜெயன் கீரனூா் காவல் நிலையத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து, பிரச்னைக்குரிய பதிவுகள் செய்யக் கூடாது, தவறான பதிவுகள் நீக்கப்பட வேண்டும் ஆகிய நிபந்தனைகளின் பேரில் பாரதி கண்ணன் விடுவிக்கப்பட்டாா்.
தொடர்புடையது
மம்மூட்டியா? மோகன்லாலா? யார் சிறந்த நடிகர்? கவனம் ஈர்க்கும் விடியோ!
நடிகருடன் திருமணம்... தயாரிப்பாளர் பேச்சால் வெட்கப்பட்ட மிருணாள்!

புலம்பும் த்ரிஷா... என்ன ஆச்சு?

கவனம் பெறும் சூர்யா - 47 தோற்றம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

