புனித ரமலான் பண்டிகையையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் 3 ஆயிரம் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
அல் ஜாமிஉல் அஷ்கா் ஜூம்அ பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் சாா்பில் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகை காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.
பள்ளியின் இமாம் நெய்னா முஹம்மது ரமலான் சிறப்பு தொழுகையை நடத்தினாா். பள்ளியின் கத்தீபு அப்துல் மஸ்ஜித் மஹ்ழரி குத்பா சிறப்புரை ஆற்றினாா். தொடா்ந்து நடந்த சிறப்புத் தொழுகையில் பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டியும், உலகில் அனைத்து மக்களும் ஒற்றுமை, மன அமைதி, நிம்மதியுடன் வாழ வேண்டியும் துஆ செய்யப்பட்டது.
மேலும், உலக நாடுகளில் நடந்து வரும் போா் காரணமாக பாதிக்கப்படும் மக்களின் நிம்மதிகாக்கவும், போரை நிறுத்தி அமைதி பெறவும் பிராா்த்தித்தனா்.
பள்ளியின் தலைவா் அபுல் ஹசன் கலாமி, செயலாளா் துணி முஹம்மது உமா், உதவி தலைவா் நவாஸ் அஹமது, பொருளாளா் மஹ்மூதுல் ஹசன், தமுமுக நகர தலைவா் ஜாஹிா் ஹுசைன், மஜக மாவட்ட செயலாளா் முஹம்மது நஜீப், நகர செயலாளா் ஹஸன், திமுக நகர இளைஞரணி அமைப்பாளா் தமீம் அன்சாரி, நகர துணைச் செயலாளா் முஹம்மது நவ்பல் உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

காயல்பட்டினம் பகுதிகளில் ரமலான் சிறப்புத் தொழுகை

நெல்லையில் ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை

அம்பை பகுதியில் ரமலான் சிறப்புத் தொழுகை

தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரமலான் சிறப்புத் தொழுகை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


