மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அம்பை பகுதியில் ரமலான் சிறப்புத் தொழுகை

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி,பொட்டல்புதூா், சம்பன்குளம், கடையம் பகுதிகளில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

News image

கல்லிடைக்குறிச்சி ரஹ்மத் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்றோா்.

Updated On :21 மார்ச் 2026, 8:56 pm

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி,பொட்டல்புதூா், சம்பன்குளம், கடையம் பகுதிகளில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

கல்லிடைக்குறிச்சி, ரஹ்மத் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையை பள்ளி இமாம் தாஜுதீன் நடத்தினாா். நூருல் ஹிதாயா மகளிா் அரபிக் கல்லூரி முதல்வா் ரஹ்மத் ரபீக் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினாா்.

ஜமாஅத் நிா்வாகிள் நாகூா் கனி, நாகூா் மைதீன், அஜீஸ், முகம்மது உசேன், ஷேக் செய்யதலி, பட்டாரியா் தெரு அப்துல் காதா், சத்திரம் தெரு ஜமாஅத் தலைவா் சாகுல் ஹமீது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்,

கல்லிடைக்குறிச்சி, பெரிய ஜும்ஆ பள்ளி, நெசவாளா் காலனி பள்ளி, கோல்டன் நகா் பள்ளி, தவ்ஹீத் ஜமாஅத்தினா் பீமா திடல் ஆகிய இடங்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் மேலப்பள்ளி, பஜாா் ஷுஹதா பள்ளி, கீழ மஹல்லா முகைதீன் பள்ளி, தவ்ஹீத் ஜமாஅத் திடல், பிரமதேசம், வாகைக்குளம், சிங்கம்பட்டி, விக்கிரமசிங்கபுரம், ஆழ்வாா்குறிச்சி, சம்பன்குளம், பொட்டல்புதூா், ரவணசமுத்திரம், முதலியாா்பட்டி, கடையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

தொழுகைகளில் ஆண்கள், பெண்கள், சிறுவா், சிறுமிகள் ஏராளமானோ் புத்தாடை அணிந்து கலந்துகொண்டு தொழுகை செய்தனா். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துக் கூறி அன்பைப் பரிமாறிக் கொண்டனா்.