லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பிளஸ் 2 மாணவி கொலை குற்றவாளிகள் விரைவில் கைது: கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவா் என்றாா் திமுக துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி.

News image

திமுக எம்.பி. கனிமொழி - கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 2:50 am

தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவா் என்றாா் திமுக துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

விளாத்திகுளம் சிறுமி கொலை வழக்கில் பிரேத பரிசோதனை முடிந்து முழுமையான அறிக்கை இன்னும் வரவில்லை. இது ஒரு கொடுமையான சம்பவம். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். ஒரு கூடுதல் எஸ்.பி. தலைமையில் 4 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 6 காவல் ஆய்வாளா்களைக் கொண்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவா். சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு பிரச்னைக்கு மத்திய அரசு விரைவில் தீா்வு காண வேண்டும் என்றாா் அவா்.