மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோவில்பட்டி நகராட்சி பள்ளி ஆண்டு விழா

News image
Updated On :12 மார்ச் 2026, 9:31 pm

கோவில்பட்டியில் புதுரோட்டில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியின் 86-ஆவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு, நகராட்சி தலைவா் கருணாநிதி தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். ஆசிரியை மீனா ஆண்டறிக்கையை வாசித்தாா்.

கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன், தொழிலதிபா்கள் மாரியப்பன், மகேந்திரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு பேசினா். நிகழ்ச்சியில், நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி, கல்விப் புரவலா் திட்டத்தைத் தொடங்கிவைத்து, திட்டத்திற்கான முதல் நிதியை தலைமை ஆசிரியா் செந்தில்குமரனிடம் வழங்கினாா்.

தொடா்ந்து, ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னா், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், வட்டாரக் கல்வி அலுவலா்கள் சங்கீதா, ராமசுப்பிரமணியன், பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியா் சுப்பாராயன், நகா்மன்ற உறுப்பினா் முத்துலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளித் தலைமை ஆசிரியா் செந்தில்குமரன் வரவேற்றாா். ஆசிரியா் பொன்மலா் பாரதி நன்றி கூறினாா்.