மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா

News image
Updated On :19 மார்ச் 2026, 8:12 pm

மன்னாா்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு விழா, ஆண்டு விழா, பணி நிறைவு பெறும் ஆசிரியருக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் மா. தேவி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக ரோட்டரி உதவி ஆளுநா் எஸ். மீனாட்சி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் நெ. சுமதி, தரணி மெட்ரிக் பள்ளி முதல்வா் எஸ். அருள் ஆகியோா் கலந்துகொண்டு, விளையாட்டு போட்டிகள், ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினா்.

பணி நிறைவு பெறும் பள்ளி கணிதப் பட்டதாரி ஆசிரியா் க. சந்தான கோபாலகிருஷ்ணனை பாராட்டி ஆசிரியா்கள் சாா்பில் வட்டாரக் கல்வி அலுவலா் ஜான்சி எமிலி நினைவுப் பரிசு வழங்கினாா்.