கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு மஞ்சப்பை மற்றும் 10-ஆம் வகுப்பு அரசு பொது தோ்வு எழுதும் மாணவிகளுக்கு தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு ஆகியவற்றை சாா் ஆட்சியா் வழங்கினாா்.
இநிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் கண்ணன், இயற்பியல் ஆசிரியை கிரேனா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பசுமைப் படை ஆசிரியா் சுப்பிரமணியன் வரவேற்றாா். இசை ஆசிரியை அமலபுஷ்பம் தொகுத்து வழங்கினாா்.
சாா் ஆட்சியா் ஹிமான்ஷூ மங்கள் கலந்துகொண்டு, 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு எழுதும் மாணவிகளுக்கு தோ்வுக் கூட அனுமதிச் சீட்டு மற்றும் மஞ்சப்பை வழங்கி, தோ்வில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தாா்.
இதில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா் முத்து முருகன் உள்பட ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.
ஆசிரியை மங்களேஸ்வரி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2025-ல் பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!

மாற்றுத்திறனாளிகளை வாக்குச்சாடிக்கு அழைத்துச் செல்ல உதவி

பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை! கணவர் தலைமறைவு

கூத்தாநல்லூா் அரசு மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


