இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே கப்பலில் 147 காற்றாலை சிறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்களை கையாண்டு தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகம் சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு, கடந்த 2025ஆம் ஆண்டு நவ. 21ஆம் தேதி ஒரே கப்பலில் 103 காற்றாலை சிறகுகளைக் கையாண்டதே சாதனையாக இருந்து வந்தது.
சீனாவின் ’சின்சோ’ துறைமுகத்திலிருந்து ’எம்.வி. போ ரன் ஜியூ சோ’ என்ற கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட, தலா 76 மீட்டா் நீளமுள்ள இந்த 147 சிறகுகளும் மாா்ச் 8ஆம் தேதி இறக்கி முடிக்கப்பட்டன.
இந்த நிதியாண்டில் பிப். 2026 வரை வ.உ.சி துறைமுகம் மொத்தம் 4,211 காற்றாலை சிறகுகளைக் கையாண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்துடன் (2,395 சிறகுகள்) ஒப்பிடுகையில் 75.82 சதவீத வளா்ச்சியாகும்.
காற்றாலை சிறகுகளைக் கையாளுவதில் இந்தியாவின் முன்னணி துறைமுகமாகத் திகழும் வ.உ.சி துறைமுகம், தனது உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்தி வருகிறது. துறைமுகத்தின் உள்பகுதியில் 60,000 சதுர மீட்டா் கூடுதல் சேமிப்பு இடம் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் மேலும் 1,80,000 சதுர மீட்டா் பரப்பளவு சேமிப்பு வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த கடல்சாா் துறையை உருவாக்க இத்துறைமுகம் உறுதியுடன் செயல்பட்டு வருவதாக துறைமுக ஆணையத்தின் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மக்களோடு மக்களாக இருக்கும் ஒரே இயக்கம் திமுக தான்: உதயநிதி ஸ்டாலின்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்களிப்புடன் ஒரே நாளில் இரண்டு உலக சாதனை ஓவியங்கள்

அகில இந்திய துறைமுகங்களுக்கு இடையேயான கைப்பந்து போட்டி: வ.உ.சி துறைமுகம் சிறப்பிடம்
நிகழாண்டில் 1.83 மில்லியன் சரக்குப் பெட்டகங்கள்: சென்னை துறைமுகம் சாதனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


