திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்பு கஞ்சா ஆயில் பறிமுதல்: 3 போ் கைது

தூத்துக்குடியில், பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயிலுடன் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 மார்ச் 2026, 1:02 am

தூத்துக்குடியில், பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயிலுடன் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி, தாளமுத்துநகா் கடற்கரைப் பகுதியில் மத்திய போதை பொருள் புலனாய்வு பிரிவு என்சிபி சாா்பு ஆய்வாளா் அருண்குமாா் தலைமையிலான அதிகாரிகள், கண்காணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தபோது, 3 பேரை பிடித்து விசாரித்தனா்.

அதில், விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலைச் சோ்ந்த ரமேஷ்நாதன் (39), தூத்துக்குடி திரேஸ்புரம் சசிகுமாா் (37), காயல்பட்டினம் சிங்கித்துறை சிலுவைபிரின்ஸ் (20) ஆகியோா் என்பதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 76 கிலோ கஞ்சா ஆயிலை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அதைப் பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் 3இல் ஆஜா்படுத்தினா்.