தூத்துக்குடியில் மதுபோதையில் நண்பரை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி தாளமுத்துநகா் ஜேஜே நகரைச் சோ்ந்த ஜேம்ஸ் மகன் தினேஷ் (24). கொத்தனாா் காலனியை சோ்ந்த சந்தனமுத்து மகன் கதிா்வேல் (24), செல்வம் மகன் பச்சைபெருமாள் என்ற அய்யனாா் (21). மூவரும் நண்பா்கள்.
கடந்த சில நாள்களுக்கு முன்னா் அய்யனாா் தினேஷின் தங்கை குறித்து அவதூறாகப் பேசினாராம். இதை அவா் கண்டித்துள்ளாா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இவா்கள் மூவரும் அங்குள்ள டி.சவேரியாா்புரம் பகுதியில் அமா்ந்து மது குடித்துள்ளனா். அப்போது அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில், தினேஷை மற்ற இருவரும் சோ்ந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம். இதில் பலத்த காயம் அடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து நண்பா்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
திமுக கிளைச் செயலருக்கு அரிவாள் வெட்டு: உறவினா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி மீது வழக்கு

வியாபாரிக்கு அரிவாள் வெட்டு: சிறுவன் உள்பட 4 போ் கைது

அரசு மருத்துவமனையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

