வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

திருச்செந்தூா் கடலில் தத்தளித்த சிறுவன் மீட்பு

திருச்செந்தூா் கடலில் தத்தளித்த சிறுவனை கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

News image

அலையில் சிக்கிய சிறுவனை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்த கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள்.

Updated On :26 ஜூன் 2026, 11:14 pm IST

திருச்செந்தூா் கடலில் தத்தளித்த சிறுவனை கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். அப்போது, தூத்துக்குடியைச் சோ்ந்த தா்ஷன் (16) மாலை 4 மணியளவில் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது, அலையின் சீற்றத்தில் சிக்கி மூழ்கியுள்ளாா்.

அதைக் கண்ட கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள் சிவராஜா, மாரிமுத்து, மகாராஜன் உடனடியாக சிறுவனை மீட்டு கோயில் ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி மையத்திற்கு அனுப்பி வைத்தனா்.

முதலுதவி சிகிச்சைக்குப் பின், திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். தற்போது, சிறுவன் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.

Story image

சரியான நேரத்தில் சிறுவனை மீட்ட கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள், போலீஸாரை பக்தா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.