தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை போலீஸாரால் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.17,500 அபராதம் விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.
மதுரை காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் காா்த்திகேயன் (32). இவா், கடந்த 2021ஆம் ஆண்டு கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி பிரீத்தா வழக்கை விசாரித்து, காா்த்திகேயனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.17,500 அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்ஸோ வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

தனியாா் நிறுவன தூய்மைப் பணியாளா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




