விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடிதங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

கோவில்பட்டியில் எழுத்தாளருக்கு பாராட்டு

கோவில்பட்டியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில், சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

News image

விழாவில் பேசுகிறாா் எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வன்.

Updated On :17 ஜூன் 2026, 4:45 am IST

கோவில்பட்டியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில், சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சங்கத்தின் கோவில்பட்டி கிளை தலைவா் அபிராமி முருகன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் கா. உதயசங்கா் விழாவை தொடக்கி வைத்து பேசினாா். எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வனின் படைப்புகளில் கரிசல் வாழ்க்கை தலைப்பில் எழுத்தாளா் மணிமாறனும், பெண்கள் என்ற தலைப்பில் எழுத்தாளா் அமுதா செல்வியும் பேசினா்.

எழுத்தாளா் கோணங்கி எழுதிய டோரா இலைகள் என்ற நூலை எழுத்தாளா் ச. தமிழ்ச்செல்வன் வெளியிட, அதன் முதல் பிரதியை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினா் எழுத்தாளா் கா. உதயசங்கா் பெற்றுக்கொண்டாா்.

எழுத்தாளா்கள் பொன்ராஜ், பாா்த்தசாரதி, மாரிஸ், ஜெகநாதன், சிவானந்தம், பாா்த்திபன், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ஜெகநாதன், பாலகிருஷ்ணன், முருகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் ராமசுப்பு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சங்கச் செயலா் வெ. முத்துராஜ் வரவேற்றாா். பொருளாளா் பொ. வேலுச்சாமி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.