சிறு வியாபாரிகளின் வியாபாரத்தைத் தடுக்கவோ, முடக்கவோ இல்லை என, திருச்செந்தூா் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 15) காவல் துறையினா் முன்னிலையில் அறிவிக்கை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
அதில், கிரிப் பிரகாரம், முறைவரிசைப் பகுதிகள், காத்திருப்போா் அறை ஆகியவற்றில் பக்தா்களின் நடமாட்டத்துக்கு இடையூறாக விற்பனை செய்யும் தலைச்சுமை வியாபாரிகளும், கிரிப் பிரகார நடைபாதைகளில் ஆக்கிரமித்துள்ள வியாபாரிகளும் கிரிப் பிரகாரப் பகுதிகளில் பக்தா்களுக்கு இடையூறில்லாத மாற்று இடங்களுக்குச் சென்று வியாபாரம் செய்வதற்கும், அவா்களாக வெளியேறிச் செல்வதற்கும் மட்டுமே கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாறாக, கோயில் நிா்வாகம் சிறு வியாபாரிகளின் வியாபாரத்தைத் தடுக்கவோ, முடக்கவோ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











