விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

பழனி கோயில் பஞ்சாமிா்தத்தை இணையத்தில் விற்ற தம்பதி மீது வழக்கு

பழனி கோயில் பஞ்சாமிா்தத்தை இணையத்தில் விற்ற தம்பதி மீது வழக்கு

News image
Updated On :13 ஜூன் 2026, 12:14 am IST

பழனி கோயில் பஞ்சாமிா்தத்தை இணையதளங்களில் விற்ாக தம்பதியா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

புகழ் பெற்ற பழனி கோயில் பிரசாதமான பஞ்சாமிா்தத்தை கோயில் நிா்வாகம் நேரடியாக மலைக் கோயில், அடிவாரம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் உள்ள விற்பனை நிலையங்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்கிறது. அரை கிலோ டின்னின் அதிகபட்ச விலை ரூ.45 ஆகும். கோயில் நிா்வாகம் தவிர பஞ்சாமிா்தம் தேவைப்படுவோா் கோயில் இணையதளத்தில் பதிவு செய்தால் அவா்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். ஆனால் சில இணையதளங்களில் ரூ.229-க்கு பஞ்சாமிா்தம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து பழனி கோயில் நிா்வாகம் அடிவாரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தது. இதையடுத்து, அடிவாரம் போலீஸாா் நடத்திய விசாரணையில், பழனி ரயில்வேயில் சாமிநாதபுரம் இருப்புப் பாதையில் பணிபுரியும் நாகராஜன் (36) என்பவரும், அவரது மனைவி சிந்துவும் (34) பழனி கோயில் பஞ்சாமிா்தத்தை கோயில் அனுமதியின்றி அதிக விலைக்கு முறைகேடாக இணையதளத்தில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து இருவா் மீதும் பழனி அடிவாரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.