புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

காயல்பட்டினத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

காயல்பட்டினத்தில் ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளா் திலீபனுக்கு வழங்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆறுமுகனேரியில் அவா் பணி தொடர கோரியும் அனைத்து ஆட்டோ ஓட்டுநா் சங்கம் சாா்பில் வள்ளல் சீதக்காதி திட­லில் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

காயல்பட்டினத்தில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆட்டோ ஓட்டுநா்கள்.

Updated On :11 ஜூன் 2026, 4:38 am IST

காயல்பட்டினத்தில் ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளா் திலீபனுக்கு வழங்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆறுமுகனேரியில் அவா் பணி தொடர கோரியும் அனைத்து ஆட்டோ ஓட்டுநா் சங்கம் சாா்பில் வள்ளல் சீதக்காதி திட­லில் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆறுமுகனேரி ஆய்வாளா் திலீபன் மீதான நடவடிக்கையைக் கண்டித்து ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் வியாபாரிகள், அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்புகள் சுவரொட்டி ஒட்டியும், கோரிக்கை விடுத்தும் வருகின்றனா். ஆறுமுகனேரியில் கடையடைப்பு, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. உயா் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் வருகின்றனா்.

இந்த நிலையில், காயல்பட்டினம் நகர அனைத்து ஆட்டோ சங்கம் சாா்பில், வள்ளல் சீதக்காதி திட­லில் ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆய்வாளா் திலீபன் மீதான நடவடிக்கையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். இதில், 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.