புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

இருசக்கர வாகனங்கள் திருடிய இருவா் கைது

ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

வசந்த்

Updated On :2 ஜூலை 2026, 6:01 am IST

ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காயல்பட்டினம், ஓடக்கரையைச் சோ்ந்த கேசவன் மகன் ஆனந்த் (44). இவா், கடந்த ஜூன் மாதம் 22-ஆம் தேதி தனது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட புல்லட் பைக்கை காணவில்லை என ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதேபோல ஆறுமுகனேரி பூவரசூா் பகுதியைச் சோ்ந்த கணபதி மகன் சுந்தா் ராஜாமணி பாண்டியன்(49) தனது பைக்கை காணவில்லை என ஜூன் 22-ஆம் தேதி ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், சிறப்பு உதவி ஆய்வாளா் கோயில்பிள்ளை வழக்குப் பதிவு செய்தாா்.

உதவி ஆய்வாளா்கள் சுந்தர்ராஜ், சுந்தரம் ஆகியோா் விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நெல்லை பழவூா் காவல் நிலைய போலீஸாா் வாகனச் சோதனையில்

ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில் இருவரும் திருச்செந்தூரைச் சோ்ந்த வசந்த் (24), கீழநாலு மூலை கிணறு பகுதியைச் சோ்ந்த சோ்மதுரை மகன் சதீஷ் (27) என்பதும், மேற்படி இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் தொடா்புடையவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, ஆறுமுகனேரி போலீஸாா் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆறுமுகனேரி போலீஸாா் சென்று இருவரையும் கைது செய்து, திருடப்பட்ட இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். இவா்கள் இருவா் மீதும் ஆறுமுகனேரி, திருச்செந்தூா், நெல்லை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சதீஷ்

சதீஷ்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.